கரும்புலி மேஜர் நிலவன் வீரவணக்க நாள்!

You are currently viewing கரும்புலி மேஜர் நிலவன் வீரவணக்க நாள்!

கரும்புலி மேஜர் நிலவன் வீரவணக்க நாள்!

கரும்புலி மேஜர் நிலவன் வீரவணக்க நாள்! 1

கரும்புலி மேஜர் நிலவன், வேவுப்புலி கப்டன் பிரசன்னா வீரவணக்க நாள் இன்றாகும்.

14.10.1998 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவுப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தளம் மீதான வேவு நடவடிக்கையின் போது சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் நிலவன், வேவுப்புலி கப்டன் பிரசன்னா ஆகிய வேங்கைகளின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

இரும்புக் கோட்டை எனவும் எவரும் நெருங்க முடியாது என்று எதிரி இறுமாப்பு கதைகள் பேசிக்கொண்டிருந்த மிக்கப்பெரும் படைத்தளம் தான் ஆனையிறவுப் படைத்தளம்.

ஆட்லறிகளின் பலத்தை தன்னகத்தே வைத்துக்கொண்டு அரக்கத்தனம் புரிந்து கொண்டிருந்தது இந்த படைத்தளம் எவரும் வந்து எதுவும் செய்ய முடியாது என்ற திமிர் எதிரியவனின் ஆனையிறவு படைத்தளத்திற்குள் பரவியிருந்தன.

தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் மீது எறிகணைகளை ஏவி கோரத்தனம் ஆடினார்கள் ஆனையிறவு படைத்தளத்தில் குந்தியிருந்த இராணுவத்தினர்.

இதைத் தாக்கியளித்து இதற்கான தாக்குதல் திட்டத்தை நடைமுறைப் படுத்த அந்த தளத்தில் இருந்த கட்டளை மையங்களையும், ஆட்லறித் தளங்களையும் பற்றிய தகவல் பெறுவதற்கு கரும்புலி மேஜர் நிலவன் தலைமையில் வேவு நடவடிக்கையில் அணி களம் இறக்கப்பட்டு செயலாற்றிக்கொண்டிருந்தார்கள்.

நீண்ட நாட்களாக சேகரித்து தகவலிலிருந்து முழுமையான திட்டங்களையும் தீட்டும் வண்ணம் அமையப்பெற்றது.

இறுதியாக அந்த ஆனையிறவு படைத்தளம் மீட்பதற்கான திட்டங்களை தீட்டுவதற்காக இறுதியான வேவு நடவடிக்கைக்கு செல்லும் போது அந்த படைத்தளத்தில் எதிரியுடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலில் கரும்புலி மேஜர் நிலவன் 14.10.1998 அன்று அந்த மண்ணில் தேசப்புயலாய் வீசி சென்றான்.  இவருடன் வேவுப்புலி கப்டன் பிரசன்னாவும் வீரச்சாவைத் தழுவிக்கொன்டான்.

தமிழீழ இல்டசிய கனவோடு பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்டு புயலான தேசத்தின் புயல்.

கரும்புலி மேஜர் நிலவன் வீரவணக்க நாள்! 2

இதே வேவு நடவடிக்கையின்போது காவியமான

கரும்புலி மேஜர் நிலவன் வீரவணக்க நாள்! 3

நீளும் நினைவுகளாகி…

கரும்புலி மேஜர் நிலவன் வீரவணக்க நாள்! 4

தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

  •  
பகிர்ந்துகொள்ள