அல்லைப்பிட்டியில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞன் கைது!

You are currently viewing அல்லைப்பிட்டியில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞன் கைது!

யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு மற்றும் வன்புனர்விற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேகநபர் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் என சிறீலங்கா காவற்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

அண்மையில் யாழ். வைத்தியசாலையில் அதிகளவு மாத்திரைகளை உற்கொண்டு தற்கொலைக்கு முயன்ற அல்லைப்பிட்டியினை சேர்ந்த 11 வயது சிறுமி காப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட உளவள சிகிச்சையின் பொழுது அல்லைப்பிட்டி வெண்புறவி நகர்பகுதியினை சேர்ந்த 25 வயதான இளைஞர் தொடர்பில் சிறுமி தகவல் வெளியிட்டார்.

தான் உட்பட்ட ஐந்து சிறுமிகளுக்கு தொலைபேசி மூலம் தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய நிலையில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியதன் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் வைத்தியசாலை மூலம் ஊர்காவற்றை சிறீலங்கா காவற்துறையினருக்கு தகவல் வழங்கபட்ட நிலையில் ஊர்காவற்றை சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சிறுமியினை சட்ட வைத்திய அதிகாரி முன் பொலிஸார் முற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சிறுமி வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக பாலியல் தொந்தரவை மேற்கொண்ட 25 வயதுடைய சந்தேகநபரை சிறீலங்கா காவற்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மற்றுமொரு சிறுமியும் குறித்த சந்தேகநபரால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில் சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments