ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் பலி!

You are currently viewing ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் பலி!

ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் பலியான சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பகுதியிலே இச் சம்பவம் நிகந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தில் இரவு இடம்பெற்ற உற்சவ பூஜையின் போது ஆலயத்தின் கதவினுள் இருந்த மின்சார வயரினைஇளைஞன் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது வயரியில் மின்சார ஒழுக்கு காணப்பட்ட இடத்தில் இளைஞரின் கை பட்டமையினையடுத்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலிலேயே இளைஞர் மரணமடைந்துள்ளார்.

இவ்விபத்தில் 29 வயதுமதிக்கத்தக்க நா.கபிலன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையுடன் இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments