இதுவரை சிறீலங்காவில் கொரோனா தொற்றில் 30,839 பேர் சிகிச்சையில்: மொத்த தொற்று 180,000 -ஐ கடந்தது!

You are currently viewing இதுவரை சிறீலங்காவில் கொரோனா தொற்றில் 30,839 பேர் சிகிச்சையில்: மொத்த தொற்று 180,000 -ஐ கடந்தது!

இலங்கையில் கோவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்தைக் கடந்ததுள்ள அதேவேளை, கொரோனா மரணங்களும் 1400-ஐ கடந்து அதிகரித்துள்ளன.

அதேநேரம் இலங்கையில் கோவிட் 19 தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 30 ஆயிரத்தைக் கடந்து 30,839 ஆக பதிவாகியுள்ளது.

நாட்டில் நேற்று 2,882 கோவிட்-19 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மொத்த தொற்று நோயாளர் தொகை 180,593 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இவா்களில் 148,391 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் நேற்று மேலும் 42 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த கொரோனா மரணங்கள் 1405 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments