இந்தியாவை கடுமையாக தாக்கும் கொரோனா மேலும் 1,45,384 பேருக்கு தொற்று உறுதி!

You are currently viewing இந்தியாவை கடுமையாக தாக்கும் கொரோனா மேலும் 1,45,384 பேருக்கு தொற்று உறுதி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரங்களில் 1 இலட்சத்து 45 ஆயிரத்து 384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்று ஒரே நாளில் 794 பேர் கொரோனாவுக்குப் பலியாகினர்.

புதிய தொற்று நோயாளர்களுடன் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,05,926 -ஆக உயர்ந்துள்ளது. மொத்த கொரோனா மரணங்கள் 1,68,436 ஆக அதிகரித்துள்ளன.

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,19,90,859 ஆக பதிவாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் 77,567 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 10,46,631 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை, இந்தியா முழுவதும் இதுவரை 9,80,75,160 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலக அளவில் அதிக கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவான நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா தொடந்து முதலிடத்திலும் பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள