இன்றும் இரண்டு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

You are currently viewing இன்றும் இரண்டு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதை குழியில் இருந்து இன்று( 11.09.2023) திங்கட்கிழமை மேலும் இரண்டு மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

புதைகுழி அகழ்வின் [ 5,வது]  நாளான இன்றைய நாள் கண்டு பிடிக்கப்பட்ட இந்த மனித எச்சங்களுடன் மேலும் பல மனித எச்சங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக காணப்படுவதான அதிர்ச்சித் தகவலும் வெளிப் படுத்தப் பட்டிருக்கின்றது.

இதேவேளை இன்று கண்டு பிடிக்கப் பட்ட மனித எச்சங்கள் இரண்டும் ஆண்கள் உடையவை என்றும்,அவற்றுடன் துப்பாக்கி ரவை ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை இறுதிப் போது சிறிலங்கா படைகளிடம் உறவுகளால் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட போராளிகள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட மனித எச்சங்களே என்பது உறுதிப் படுத்தப் படுவதாக அந்த அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டோரால் தெரிவிக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இன்றும் இரண்டு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! 1இன்றும் இரண்டு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! 2இன்றும் இரண்டு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! 3

.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments