இளவாலை – வசந்தபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்து குடும்பஸ்தர் சடலம் மீட்பு!

You are currently viewing இளவாலை – வசந்தபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்து குடும்பஸ்தர் சடலம் மீட்பு!

இளவாலை – வசந்தபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்து குடும்பஸ்தர் வெற்றுக் காணியில் இருந்து வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதிய கொலனி, கீரிமலை பகுதியைச் சேர்ந்த ஐயங்கன் சிவானந்தராஜா (வயது 47) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், குடும்பத்தவர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர்களை பிரிந்து வந்து இளவாலை – வசந்தபுரம் பகுதியில் உள்ள காணியில் குடிசை ஒன்றை அமைத்து தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் வெள்ளிக்கிழமை அவரது குடிசைக்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இவ்வாறு மீட்கப்பட்டவரது சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனைகளின் அடிப்படையில் அவர் அதிக மதுப் பாவனை காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments