ஈஸ்டர் தாக்குதலுக்கு இந்தியாவே காரணம்! – மைத்திரி வாக்குமூலம்!

You are currently viewing ஈஸ்டர் தாக்குதலுக்கு இந்தியாவே காரணம்! – மைத்திரி வாக்குமூலம்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்தது இந்தியாவே என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளித்த வாக்குமூலத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் என சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து இந்திய இராஜதந்திரி ஒருவரே தன்னிடம் ஒப்புக்கொண்டார் என்றும், அதற்கான காரணத்தையும் கூறினார் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் மற்றும் அதுபோன்ற திட்டங்களை இந்தியாவுக்கு வழங்குவதில் இலங்கை அக்கறை காட்டாததே இதற்குக் காரணம் என்றும் இந்திய இராஜதந்திரி கூறியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments