வடமராட்சி கிழக்கை சேர்ந்த இருவர் 30 கிலோ கஞ்சாவுடன் கைது!

You are currently viewing வடமராட்சி கிழக்கை சேர்ந்த இருவர் 30 கிலோ கஞ்சாவுடன்  கைது!

சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30.5 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் வவுனியா சிறீலங்கா காவற்துறை விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

வவுனியாவில் உள்ள பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் .

கைதுசெய்யப்பட்டவர்கள் வடமராட்சி கிழக்கு பகுதியை சேர்ந்த 35,36 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபர்களை மருதங்கேணி சிறீலங்கா காவற்துறையினரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments