“உக்ரைன் மீதான போர் தொடரும்” – ரஷ்யா திட்டவட்டம்!

You are currently viewing “உக்ரைன் மீதான போர் தொடரும்” – ரஷ்யா திட்டவட்டம்!

உக்ரைன் மீதான போர் தொடரும் என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இன்று 6வது நாளாக உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், கார்கிவ் நகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ கூறுகையில், உக்ரைன் மீதான தாக்குதல் தொடரும், மேற்கு நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து ரஷ்யாவை பாதுகாப்பதற்கான இலக்கை அடையும் வரை தாக்குதல் தொடரும் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ரஷ்ய ஆதரவு நாடான பெலாரஸ் நாட்டின் படைகள் உக்ரைனின் செர்னிஹிவ் நகரில் நுழைந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஆறாவது நாளின் மத்திய சுதந்திர சதுக்கம் மற்றும் கார்கிவ் குடியிருப்பு மாவட்டங்கள் மீது கடுமையாக ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது .

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments