உயிரை பறிக்கும் செயற்கை சுவாசக் கருவிகள் ; அமெரிக்க மருத்துவர் எச்சரிக்கை!

  • Post author:
You are currently viewing உயிரை பறிக்கும் செயற்கை சுவாசக் கருவிகள் ; அமெரிக்க மருத்துவர் எச்சரிக்கை!

செயற்கை சுவாச கருவிகளே கொரோனா நோயாளிகளின் உயிரைப் பறிக்கும் கொலைக்கருவிகளாய் மாறியிருக்கலாம் என அமெரிக்க மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செயற்கை சுவாச கருவிகளுக்காக நாடுகள் பதறித் தவித்த நிலை மாறி, செயற்கை சுவாச கருவிகளே கொரோனா நோயாளிகளின் உயிரைப் பறிக்கும் கொலைக்கருவிகளாய் மாறியிருக்கலாம் என சந்தேகம் எழுப்புகிறார் நியூயார்க் மருத்துவர்.

உலகமெங்கும் உள்ள பல மருத்துவர்கள் அவரது கருத்தை ஆதரிக்கிறார்கள். இங்கிலாந்து ஆய்வு ஒன்றில் செயற்கை சுவாச கருவிகளுடன் இணைக்கப்பட்ட 98 கொரோனா நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் உயிரிழந்துவிட்டது கண்டறியப்பட்டுள்ளது.

நியூயார்க்கில், சுவாச கருவிகளில் இணைக்கப்பட்ட நோயாளிகளில் 80 சதவிகிதம் பேர் குணமடையவில்லை. மற்ற நாடுகளிலும் சுவாசகருவிகள் இணைக்கப்பட்ட நோயாளிகளின் இறப்பு வீதம் அச்சுறுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

இந்நிலையில், நியூயார்க்கைச் சேர்ந்த இளம் மருத்துவரான கேமரூன் கைல்-சிடெல் (Cameron Kyle-Sidell) “YOUTUBE” காணொளி ஒன்றில் சுவாச கருவிகள் குறித்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நூற்றுக்கணக்கான கொரோனா வைரஸ் நோயாளிகள் தன் கண் முன்னாலேயே உயிரிழப்பதைக் கண்டு தவித்துப்போயிருக்கும் Cameron எந்த சுவாச கருவிகள் கொரோனா நோயாளிகளைக் காப்பாற்றும் என நம்பப்படுகிறதோ, அதே சுவாச கருவிகள் அவர்கள் உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்று நம்புகின்றார்.

செயற்கை சுவாச கருவிகள் நிமோனியாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுபவை. நிமோனியா நோயாளிகளுக்கு முதலில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, அதன் பிறகு கருவி ஒன்றின் உதவியுடன் ஒரு குழாய் அவர்களது சுவாசப்பாதைக்குள் செலுத்தப்படும். அதன்பின், அந்த குழாய் மூலம் பிராணவாயு செலுத்தப்படும்.

சுவாசக் கருவிகள் வேலை:-

சுவாசிக்க முடியாமல் சோர்ந்திருக்கும் நோயாளியின் நுரையீரலுக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட, அவரது உடலுக்குள் பிராணவாயு செல்லும்.ஆனால், கொரோனா நோயாளிகளுக்கும் நிமோனியா நோயாளிகளுக்கும் வித்தியாசம் உள்ளது. கொரோனா நோயாளிகளால் சுவாசிக்க முடியும். நிமோனியா நோயாளிகளால் சுவாசிக்க முடியாது, ஆகவே அவர்களது நுரையீரலின் வேலையை செயற்கை சுவாச கருவிகள் செய்யும்.

நிமோனியா நோயாளிகள் பிராணவாயு பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதில்லை, அவர்கள் சுவாச செயலிழப்பால் பாதிக்கப்படுகிறார்கள்.அதே நேரத்தில், மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் கொரோனா நோயாளிகள் சுவாசிக்க முடியாமல் வருவதில்லை.அவர்கள், மலையேறும் போது அதிக உயரத்திற்கு செல்பவர்கள் போலவும், விமானத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்படுபவர்கள் போலவும்தான் கொண்டுவரப்படுகிறார்கள்.

தவறாக பயன்படுத்துதல் :-

அவர்களுக்கு தேவை பிராணவாயு தானேயொழிய, செயற்கை சுவாச கருவிகள் அல்ல என்கிறார் கேமரூன். ஜெர்மனி மருத்துவர் லூசியானோ கட்டினோனி உட்பட பலரும் கேமரூனின் கருத்தை ஆதரிக்கிறார்கள். சொல்லப்போனால், இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சாதாரணமாக பிராணவாயு செலுத்தப்பட்டுதான் அவர் உடல் நிலை முன்னேற்றம் அடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

சில மருத்துவர்கள், நோயாளியை இடது புறம் அல்லது வலது புறம் சாய்வாக படுக்க வைத்திருக்கிறார்கள், இது சுவாச கருவிகள் மூலம் நுரையீரலுக்குள் பிராணவாயு செலுத்தாமல், பிராணவாயு மாஸ்க் மூலம் பிராணவாயு செலுத்தப்பட்டாலே போதுமான அளவு பிராணவாயு நோயாளியின் இரத்தத்தில் அதிகரிக்க உதவும் என்கிறார்கள். ஆக, செயற்கை சுவாச கருவிகள் நிமோனியா நோயாளிக்கு வேண்டுமானால் நன்மை செய்யலாம், ஆனால் கொரோனா நோயாளிக்கு அது நன்மையை விட தீமைதான் அதிகம் செய்யும் என்கிறார் கேமரூன்.

இதுபோல் சீனாவிலும் செயற்கை சுவாச கருவிகளை பயன்படுத்த தெரியாமல் பயன்படுத்தி பலர் உயிர் இழந்து உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

செயற்கை சுவாசக் கருவி செயல்படும் விதம் :-

நோயாளிக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்படுவதற்கு முன்பாக சுகாதாரப் பணியாளா்கள் அந்நபரை மயக்கமடையச் செய்கின்றனா். அதன் பிறகு அந்நபரின் மூக்கிலும் வாயிலும் சிறிய குழாய்களைப் பொருத்தி அதை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைத்து விடுகின்றனா்.

1-செயற்கை சுவாசக் கருவியின் திரை நோயாளிக்கு பிராணவாயு அளிக்கப்படும் அளவையும், அவரின் உடலிலிருந்து வெளியேறும் CO2 அளவையும் காட்டுகிறது. நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு ஏற்ப அந்த அளவுகளை மருத்துவா்கள் மாற்றுகின்றனா்.

2- இந்தக் கருவியின் மூலம் நோயாளிக்கு அளிக்கப்படும் காற்றுக்கு ஈரப்பதம் வழங்கப்படுகிறது.

3- நோயாளியின் மூக்கிலும் வாயிலும் பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் மூலம் காற்று நுரையீரலுக்குச் செல்கிறது.

4- நோயாளியின் உடலில் உற்பத்தியாகும் காா்பன் டை ஆக்ஸைட் செயற்கை சுவாசக் கருவி மூலம் வெளியேற்றப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள