உலகப்புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் Ronaldhino, பரகுவேயில் தடுத்து வைப்பு! போலியான கடவுச்சீட்டை வைத்திருந்ததாக குற்றச்சாட்டு!!

You are currently viewing உலகப்புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் Ronaldhino, பரகுவேயில் தடுத்து வைப்பு! போலியான  கடவுச்சீட்டை வைத்திருந்ததாக குற்றச்சாட்டு!!

உலகப்புகழ் பெற்ற, பிரேஸில் கால்பந்தாட்டவீரர் “Ronaldinho”, பராகுவே நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பொய்யான கடவுச்சீட்டுடன் பராகுவே நாட்டுக்குள் நுழைந்ததாக அவர்மேல் பராகுவே குடிவரவு / குடியகல்வு அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளார்கள். Ronaldinho விற்கு எதிராக நடந்த வழக்கொன்றில் தனது முறையான கடவுச்சீட்டை பறிகொடுத்த Ronadinho, தனது புத்தகமொன்றை பரகுவேயில் வெளியிட்டு வைப்பதற்காக பரகுவேயிற்கு வரவேண்டியிருந்ததால், தவறான முறையில் பெறப்பட்ட கடவுச்சீட்டை பாவித்து பராகுவே வந்தார் என சொல்லப்படுகிறது.

உலகப்புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரராக விளங்கிய Ronaldhino, முறையற்ற விதத்தில் கட்டடங்களை காட்டினார் என அவர்மீது தொடுக்கப்பட்ட வழக்கொன்றில், அவருக்கெதிராக சுமார் 20 மில்லியன் டொலர்கள் தண்டம் விதிக்கப்பட்டதால், மிகுந்த பொருளாதார சிக்கலில் அவர் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Ronaldhino தங்கியிருக்கும் உல்லாசவிடுதியை சுற்றிவளைத்திருக்கும் பராகுவே காவல்துறையினர், அவர்மீது வழக்கு தொடுப்பதற்காக பராகுவே நீதிமன்றத்தின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள