உல்லாசப்பயணம் வந்த நிலையில் இளைஞருக்கு ஏற்பட்ட துயரம்!

You are currently viewing உல்லாசப்பயணம் வந்த நிலையில் இளைஞருக்கு ஏற்பட்ட துயரம்!

திருகோணமலை நிலாவெளி கடற்பரப்பின் கோபாலபுரம் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் நீரோடையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். 

நீரோடையில் அடித்துச்செல்லப்பட்ட மூவரில், இருவரினை, பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு மற்றும் கடற்படையின் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் மீட்டுள்ளனர். 

காணாமல் போன மற்றுமொரு இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் வருடாந்த உல்லாசப் பயணத்திற்காக வந்திருந்த நிலையில், தடை செய்யப்பட்ட பகுதிக்கு அப்பால் குளிப்பதற்குச் சென்றமையினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தலத்துஓயா, தம்பகஹவெல, பட்டியமுல்ல பகுதியைச் சேர்ந்த நளின் பிரியந்த (வயது 21) என்பவரே காணாமல் போயுள்ளார்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments