எதிர்ப்பு போராட்டத்திற்கு தயாரகும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

You are currently viewing எதிர்ப்பு போராட்டத்திற்கு தயாரகும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

பேரினவாத சிங்கள நீதி அமைச்சின் நடமாடும் சேவை ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திலும் நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

இன்று காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்ற கட்டடம் திறந்து வைக்கப்பட்டதோடு,   அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடமாடும் சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் ஓ.எம்.பி அலுவலகம் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடச்சியாக 1786 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தயாராகி வருகின்றனர். 

இதன் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகம் மற்றும் முல்லைத்தீவு நீதிமன்றம் முல்லைத்தீவு நகர் பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு புலனாய்வாளர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments