எரிபொருள் வரிசையில் ஆடி அமாவாசை விரதத்தை முடித்துக்கொண்ட நபர்!

You are currently viewing எரிபொருள் வரிசையில் ஆடி அமாவாசை விரதத்தை முடித்துக்கொண்ட நபர்!

சிறீலங்கா மற்றும் தாயகத்தில் எரிபொருள் பாஸுக்கு எரிபொருள் நிரப்பப்படுகிறது.  QR Code அடிப்படையில், வாகன இறுதி இலக்கத்துக்கு எரிபொருள் வழங்கப்படுகிறது.

எனினும், எரிபொருள் வரிசை நீண்டு கொண்டே செல்கின்றது.   இதனிடையே, எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் ஆடி அமாவாசை விரதத்தை வீதியில் முடித்துக்கொண்ட சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.

யாழ். பருத்தித்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்றது.

எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த ஒருவர் தமது விரதத்தை வீதியில் முடித்து கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments