எழுச்சிகரமாக இலக்கு நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்!

You are currently viewing எழுச்சிகரமாக இலக்கு நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்!

 

13ம் நாளாக நேற்று  27/02/2024காலை கொல்மார் நகரதிலிருந்து அகவணக்கத்தோடு  ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம்

பிரான்சில் வித்தனைம், கிங்கின்சம்,இல்சாக்,முலூஸ் மாநகர முதல்வர்களை சந்தித்து தனது இலக்கு நோக்கி பயணிக்கின்றது.  வித்தனைம்  மாநகர சபையினர் அறவழிப்போராளிகளை சுடுபாணம், பழச்சாறு கொடுத்து மகிழ்ச்சியாக வரவேற்று காலை உணவு கொடுத்து எமது அறவழிப் போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து,எமது அறவழிப் போராட்டத்தின்  இலக்கு பற்றி மாநகர முதல்வருடனான கலந்துரையாடல் நடைபெற்றது, இதில் சிங்களபெளத்த இனவாத அரசால் திட்டமிட்டு நடந்தப் பட்ட தமிழினப் படுகொலைகள் பற்றியும். தற்போது தமிழீழத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழின அழிப்பு பற்றியும் ஆதாரங்களுடன் எடுத்துரைக்கப்பட்டது.   தமிழர்களுடைய நியாயமான கோரிக்கை அடங்கிய மனுவைக் கையளித்து

சந்திப்புகளை மேற்கொண்டு பிரான்சு அரசு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டுமென கேட்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் அவையிலும்  ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிலும் சம நேரத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் பிரான்சு நாடும் மிக முக்கியமானது. எனவே பிரான்சில் வாழும் மக்களின் சக்தியோடும் ஊடகங்களின் முக்கியத்துவத்தோடும் பிரான்சு நாட்டு மக்கள் தமிழர்களின் நியாயமான கோரிக்கைக்கு பிரான்சு நாட்டினைச் செவிசாய்க்க வைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

அறவழி ஈருருளிப்பயணத்தின் மூலம் வலுவான அரசியற் செய்தியினை  நகரசபையில் தெரிவித்தோம் எமது அறவழிப் போராட்டத்தை பாராட்டி மாநகர சபையின் இலச்சினை பதித்த நினைவுப்பரிசுகள் அறவழிப்  போராளிகளுக்கு வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

முலூஸ்  முதல்வர் அவர்களும் மனித நேய செயற்பாட்டாளர்களை இன்முகத்தோடு வரவேற்றது மட்டுமல்லாமல் பன்னெடுந்தூரம்  வலி சுமந்து  வந்த எமக்கு  சுடுபாணம் தந்து எமது நியாயமான கோரிக்கைகளினை தாம் வெளி நாட்டு வெளிவிவகார அமைச்சிடமும் பிரான்சு அரச அதிபரிடமும் சமர்ப்பிப்பதாகவும் உறுதிமொழி தந்து ஊக்குவித்தனர். நகரசபை முதல்வர்கள் தம் முகநூல் பக்கங்களிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனித நேய ஈருருளிப்பயணம் சார்ந்த பதிவுகளை பதிவுசெய்து தம் ஆதரவினைத் தெரிவித்தனர்.

எழுச்சிகரமாக இலக்கு நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கும் அறவழிப் போராட்டம். எதிர் வரும் திங்கட் கிழமை 04/03/2024திகதி அன்று 14மணிக்கு ஐ.நா முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் தமிழீழ மக்களின் நீதிக்காகவும் விடுதலைக்கும் நடக்க இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொள்ள இருக்கின்றது. எனவே அனைத்து மக்களும் உங்கள் வரலாற்றுக்கடமையினை ஆற்ற வாருங்கள்.

”மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது”

– தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்”

«தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்»

எழுச்சிகரமாக இலக்கு நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்! 1
எழுச்சிகரமாக இலக்கு நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்! 2
எழுச்சிகரமாக இலக்கு நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்! 3
எழுச்சிகரமாக இலக்கு நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்! 4
எழுச்சிகரமாக இலக்கு நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்! 5
எழுச்சிகரமாக இலக்கு நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்! 6
எழுச்சிகரமாக இலக்கு நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்! 7
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments