ஒருநாள் துடுப்பாட்டம் : தென்ஆப்பிரிக்க அணியிடம் இங்கிலாந்து தோல்வி!

  • Post author:
You are currently viewing ஒருநாள் துடுப்பாட்டம் : தென்ஆப்பிரிக்க அணியிடம் இங்கிலாந்து தோல்வி!

முதலாவது ஒருநாள் துடுப்பாட்ட போட்டியில், தென்ஆப்பிரிக்க அணியிடம் இங்கிலாந்து தோல்வியடைந்தது.

இங்கிலாந்து துடுப்பாட்ட அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில் இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் துடுப்பாட்ட போட்டி கேப்டவுனில் நேற்று முன்தினம் நடந்தது.

நாணய சுழட்சியில் ஜெயித்த தென்ஆப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 பந்து பரிமாற்றங்களில் 8 இலக்குகள் இழப்புக்கு 258 ஓட்டங்களை எடுத்தது.

அதிகபட்சமாக ஜோ டென்லி 87 ஓட்டங்களும், கிறிஸ் வோக்ஸ் 40 ஓட்டங்களும் எடுத்தனர்.

தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் தப்ரைஸ் ஷம்சி 3 இலக்குகள் வீழ்த்தினார். பின்னர் 259 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரீஜா ஹென்ரிக்ஸ் 6 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து தெம்பா பவுமா, கேப்டன் குயின்டான் டி காக்குடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். 15-வது சதம் அடித்த குயின்டான் டி காக் 107 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜோரூட் பந்து வீச்சில் ஆடடமிழந்தார்.

தெம்பா பவுமா 98 ஓட்டங்களில் கிறிஸ் ஜோர்டான் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். 2-வது இலக்குக்கு குயின்டான் டி காக்தெம்பா பவுமா ஜோடி 173 ஓட்டங்கள் சேர்த்தது. 47.4 பந்து பரிமாற்றங்களில் தென்ஆப்பிரிக்க அணி 3 இலக்குகள் இழப்புக்கு 259 ஓட்டங்கள் எடுத்து 7 இலக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வான்டெர் துஸ்சென் 38 ஓட்டங்களுடனும், ஸ்முட்ஸ் 7 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி போட்டி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் துடுப்பாட்ட போட்டி டர்பனில் நாளை நடைபெறவுள்ளது .

பகிர்ந்துகொள்ள