ஒரு மாதத்திற்கும் குறைவான 17 பச்சிளம் குழந்தைகளுடன் 67 சிறுவர்கள் கொரோனாவுக்கு பலி!

You are currently viewing ஒரு மாதத்திற்கும் குறைவான 17 பச்சிளம் குழந்தைகளுடன் 67 சிறுவர்கள் கொரோனாவுக்கு பலி!

ஒரு மாத்திற்கும் குறைவான 17 பச்சிளம் குழந்தைகளுடன் சிறுவர்கள் 67 பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரையில் 18 வயதுக்குக் கீழ்ப்பட்ட 69,130 சிறுவர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாகக் குடும்பநல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் 67 சிறுவர்கள் கொவிட் தொற்றினால் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், ஒரு மாதத்திற்கும் குறைவான வயதுடைய 17 சிசுக்களும், ஒரு மாதம் முதல் ஒரு வருடத்திற்கு இடைப்பட்ட வயதுடைய 17 சிசுக்களும், ஒரு வயது முதல் 5 வயதுக்கு இடைப்பட்ட வயதுடைய 13 சிறுவர்களும், 6 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட 12 சிறுவர்களும், 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட 5 சிறுவர்களும், 15 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட 3 சிறுவர்களும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவலிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஊடக இணைப்பாளர் வைத்தியர் கபில ஜயரத்ன பெற்றோர்களிடம் கோரியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments