ஓஸ்லோ பராமரிப்பு இல்லங்களில் 135 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்!

  • Post author:
You are currently viewing ஓஸ்லோ பராமரிப்பு இல்லங்களில் 135 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்!

ஒஸ்லோவில் உள்ள பராமரிப்பு இல்லங்களில், ஊழியர்கள் மற்றும் அங்கு வசிப்பவர்கள் உட்பட 135 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு இப்போது குணமடைந்து ஆரோக்கியமாக உள்ளனர் என்று நகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் அங்கு வசித்து வந்தவர்களில் 31 பேர் இறந்துள்ளனர்.

மேலும், நகராட்சி கோவிட் -19 சிகிச்சைப் பிரிவில் (KCB – இது ஒரு பராமரிப்பு இல்லமாக வரையறுக்கப்படவில்லை) ஐந்து பேர் இறந்துள்ளனர். KCBயில் சிகிச்சையளிக்கப்பட்ட 19 நோயாளிகள் குணமடைந்து ஆரோக்கியமாக உள்ளனர் என்றும் மேலும், அங்கு இப்பொழுது நோயாளிகள் இல்லை என்றும் தேசிய சுகாதார வாரியம் திங்களன்று தெரிவித்துள்ளது.

ஓஸ்லோ பராமரிப்பு இல்லங்களில் 135 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்! 1

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள