கடந்த 48 மணி நேர விபத்துக்களில் இலங்கையில் 30 பேர் உயிரிழப்பு!

You are currently viewing கடந்த 48 மணி நேர விபத்துக்களில் இலங்கையில் 30 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கடந்த 48 மணி நேரங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் குறைந்தது 30 பேர் உயிரிழந்ததுடன், 151 பேர் காயமடைந்ததாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

புதன்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். அத்துடன், 71 பேர் காயமடைந்தனர்.

நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்ததுடன், 80 பேர் காயமடைந்தனர் எனவும் அஜித் ரோஹன கூறினார்.

நேற்று விபத்துக்களில் உயிரிழந்த 16 பேரில் 12 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் எனவும் அவா் சுட்டிக்காட்டினார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments