கணவர் பிலிப்பிற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டார் ராணி இரண்டாம் எலிசபெத்!

You are currently viewing கணவர் பிலிப்பிற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டார் ராணி இரண்டாம் எலிசபெத்!

அரச குடுபத்தினரிடமிருந்து இறுதி பிரியாவிடைபெற்ற ராணி இரண்டாம் எலிசபெத், அவரது தந்தை மன்னர் நான்காம் ஜார்ஜ் மெமோரியல் சேப்பலின் அடியில், கணவர் பிலிப்பிற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அங்கு மன்னர் மூன்றாம் ஜார்ஜ், நான்காம் ஜார்ஜ், ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் நான்காம் வில்லியம் உள்ளிட்ட மன்னர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ராணியின் சவப்பெட்டி புனித ஜார்ஜ் தேவாலயத்தின் கீழ் 16 அடி உயரமுள்ள அரச பெட்டகத்திற்குள் இறக்கப்பட்டது.

மாலை 7.30 மணியளவில் வின்ட்சர் டீன் அவர்களால் நடத்தப்பட்ட சேவை ஆரம்பமாகியதால் மரியாதை செலுத்த கோட்டை வாயில்களுக்கு வெளியே பெரும் மக்கள் கூட்டம் கூடியிருந்தது.

ராணி 1952-ல் தனது தந்தையை அடக்கம் செய்ததைப் போலவே, இளவரசி அன்னே, இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வர்ட், இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி உள்ளிட்ட அன்பானவர்களுக்கு முன்னால் மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது தாயின் சவப்பெட்டியை பூமியில் வைத்ததாக நம்பப்படுகிறது.

ராணியின் இறுதிச்சடங்கு வரலாற்றில் மிகவும் பரவலாகப் பார்க்கப்பட்ட விழாவாக கருதப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments