கனடாவில் இருந்து வந்தவர்கள் மீது மட்டக்களப்பில் தாக்குதல்!

You are currently viewing கனடாவில் இருந்து வந்தவர்கள் மீது மட்டக்களப்பில் தாக்குதல்!

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது வருட பூர்த்தி நிகழ்வுக்காக கனடாவில் இருந்து வருகை தந்திருந்த இருவர் மீது மட்டக்களப்பில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையின் தலைவர் மற்றும் செயலாளர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரியவருகின்றது.

குறித்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பழைய மாணவர்கள் அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ளார்கள்.

இந்நிலையில் கனடா நாட்டில் இருந்து வந்தவர்கள் மீதே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் கருத்து தெரிவிக்கையில் தன்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான முறைப்பாட்டை பொலிஸாரிடம் செய்ய உள்ளாகவும்,கனடா தூதரகத்திடமும் தமக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக முறையிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments