கரணவாயில் ஹெரோயின், கஞ்சாவுடன் பெண் உள்ளிட்ட 3 பேர் கைது!

You are currently viewing கரணவாயில் ஹெரோயின், கஞ்சாவுடன் பெண் உள்ளிட்ட 3 பேர் கைது!

ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களுடன் பெண் உட்பட மூவர் நெல்லியடி சிறீலங்கா காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 20 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

கரணவாய் பகுதியில் போதைப்பொருளுடன் நடமாடிய போதே 30 வயது பெண்ணும் 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர் என்று சிறீலங்கா காவற்துறையினர் கூறினர்.

இளைஞரில் ஒருவர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் என்றும் மற்றைய இளைஞரும் பெண்ணும் கரணவாய் – சமரபாகு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் சிறீலங்கா காவற்துறையினர் கூறினர்.

சந்தேக நபர்கள் மூவரும் விசாரணைகளின் பின் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments