கரிநாளை அடையாளப்படுத்தி யாழிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி!

You are currently viewing கரிநாளை அடையாளப்படுத்தி யாழிலிருந்து  மட்டக்களப்பு நோக்கி பேரணி!

எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் அண்மையில் யாழ். மாவட்டத்தில் சிவில் அமைப்புக்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து நேற்று மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தில் உள்ள மதகுருமார், சிவில் அமைப்புக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலதரப்பினரை சந்தித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடினர்.

அவர்கள் தமது போராட்டத்திற்கான அழைப்புக்களை கோரிய நிலையில் வவுனியா மாவட்ட சிவில் அமைப்புக்கள் மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவுகளை தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மாணவர் ஒன்றியத்தினரால் போராட்டம் தொடர்பான ஆதரவு கோரிய கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன-

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments