வளர்ப்பு நாயை மீட்க கிணற்றில் இறங்கிய மூத்த ஊடகவியலாளரின் மகன் பலி!

You are currently viewing வளர்ப்பு நாயை மீட்க கிணற்றில் இறங்கிய மூத்த ஊடகவியலாளரின் மகன் பலி!

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் நேற்று காலை வளர்ப்பு நாயை மீட்க கிணற்றில் இறங்கிய மூத்த ஊடகவியலாளரின் மகன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட வீட்டு நாய் கிணற்றில் விழுந்துள்ளது. குறித்த நாயை மீட்பதற்காக குறித்த இளைஞன் பாதுகாப்பற்ற கிணற்றில் தும்பு கயிறை பயன்படுத்தி இறங்கியுள்ளார்.

கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த குறித்த இளைஞன் மேல் ஏறாத நிலையில் தந்தை அயலவரின் உதவியுடன் தேடியுள்ளார்.

சேற்றில் புதைந்த நிலையில் குறித்த இளைஞன் மாட்டிக்கொண்டமையால் உயிர் இழக்க நேரிட்டுள்ளது. இந்த நிலையில் அயலவர்களின் உதவியுடன் நீர் இறைக்கப்பட்டு குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 24 வயதுடைய விவேகாநந்தன் வேணிலவன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் மூத்த ஊடகவியலாளர் விவேகாநந்தனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments