பால் புரக்கேறி பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!

You are currently viewing பால் புரக்கேறி பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!

யாழ். புத்தூர் நாவக்கிரி பகுதியில் பிறந்து 30 நாட்களான  குழந்தை இன்றைய நாள் (27-01-2023) தாயாரிடம் பால் அருந்திக் கொண்டிருந்தபோது புரக்கேறியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

புத்தூர் நவக்கரி மாதா கோவிலடியை சேர்ந்த நிசாந்தசிறி என்பவரின் மூன்றாவது ஆண் குழந்தையே தாயிடம் பாலருந்தி கொண்டிருந்த போது திடீரென புரக்கேரியுள்ளது.

இதனையடுத்து அச்சுவேலி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குழந்தை இவ்வாறு உயிரழந்துள்ளது..

குழந்தை பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி சிறீலங்கா காவற்துறையினர் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாளைய நாள் 31-ஆம் நாள் நிகழ்வுகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த வேளையில் குழந்தையின் உயிரிழப்பு அவர்களது குடும்பத்தை பாரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments