கறிச்சட்டிக்குள் விழுந்தவர் மரணம்!!

You are currently viewing கறிச்சட்டிக்குள் விழுந்தவர் மரணம்!!

உணவகத்தில் சமையலில் ஈடுபட்டிருந்த போது கறி சட்டிக்குள் தவறி விழுந்தவர், சிகிச்சை பலனின்றி, நேற்று உயிரிழந்துள்ளார். அல்வாய் வடக்கைச் சேர்ந்த இராசையா தீபன்குமார் (வயது 41) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

பருத்தித்துறை மந்திகை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையலாளராகப் பணிபுரியும் குறித்த நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை சமையலில் ஈடுபட்டிருந்த போது தி​டீரென வலிப்பு ஏற்பட்டு, கறி சட்டிக்குள் தவறி விழுந்துள்ளார். அதனையடுத்து அங்கிருந்த ஏனைய பணியாளர்கள் அவரை மீட்டு மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments