கிரீஸ் நாட்டுக்குள் நுழையும் ஏதிலிகள்மீது உள்ளூர்வாசிகள் தாக்குதல்! தன்னார்வ தொண்டர்கள்மீதும் தாக்குதல்!!

You are currently viewing கிரீஸ் நாட்டுக்குள் நுழையும் ஏதிலிகள்மீது உள்ளூர்வாசிகள் தாக்குதல்! தன்னார்வ தொண்டர்கள்மீதும் தாக்குதல்!!

சிரியாவிலிருந்து, துருக்கியூடாக ஐரோப்பாவுக்குள் நுழையும் நோக்கோடு, கிரீஸ் நாட்டுக்குள் வரும் ஏதிலிகள்மீது உள்ளூர்வாசிகள் கடும் கோபமடைந்துள்ளதோடு, அவர்கள்மீது தாக்குதல்களையும் நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

எல்லை வேலிகளை கடந்து நிலமார்க்கமாகவும், கடல்மார்க்கமாக படகுகளிலும் கிரீஸ் நாட்டுக்குள் நுழையும் சிரிய ஏதிலிகள் தங்கவைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்கள்மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் கிரீஸ் உள்ளூர்வாசிகள், முகாம்களில் தொண்டு அடிப்படையில் பணிபுரியும் தன்னார்வ மருத்துவ சேவையாளர்கள்மீதும் தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த முகாம்களில் பணிபுரியும் நோர்வேயை சேர்ந்த தன்னார்வ மருத்துவப்பணியாளர் தெரிவிக்கையில், நாட்டுக்குள் வரும் ஏதிலிகள்மீது குண்டாந்தடிகளை பாவித்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், தன்னார்வ தொண்டர்களான தங்கள்மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

களநிலைமைகள் அங்கு ஆபத்தானதாக இருப்பதால், யாருக்கும் பாதுக்காப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும், தமது தொண்டுநிறுவனத்தை சேர்ந்த ஏனையோர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது நாட்டுக்குள், அத்துமீறி நுழைய முற்பட்ட ஏதிலிகளை எல்லையிலேயே தாம் தடுத்து நிறுத்திவிட்டதாக கிரீஸ் எல்லைக்காவல் துறையினர் தெரிவித்திருக்கும் நிலையில், அதில் உண்மையில்லை எனத்தெரிவித்திருக்கும் துருக்கி, பெருமளவிலான ஏதிலிகள், கிரீஸ் எல்லைகளை கடக்கும் காணொளிகளை மேற்குலக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.

பகிர்ந்துகொள்ள