கிளிநொச்சியில் கர்ப்பிணி பெண், மாற்றுத்திறனாளி மீது சிறீலங்கா காவல்துறையினர் தாக்குதல்!

You are currently viewing கிளிநொச்சியில் கர்ப்பிணி பெண், மாற்றுத்திறனாளி மீது சிறீலங்கா காவல்துறையினர் தாக்குதல்!

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கர்ப்பிணி பெண் உட்பட்ட  மாற்றுத்திறனாளி ஆகியோர் மீது   சிறீலங்கா காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொண்டதையடுத்து  சிறீலங்கா காவல்துறையினர் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதியில  உள்ள சிறீலங்கா காவல்துறை நிலையத்திலிருந்து திங்கட்கிழமை (09-05-2022) மாலை  முச்சக்கர வண்டியில் சென்ற சிறீலங்கா காவல்துறையினர் குறித்த வீட்டில் கசிப்பு இருப்பதாக தெரிவித்து வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த  இளைஞரை   கைது செய்ததால் காவல்துறைக்கும் வீட்டிலிருந்தவர்களுக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

கிளிநொச்சியில் கர்ப்பிணி பெண், மாற்றுத்திறனாளி மீது சிறீலங்கா காவல்துறையினர் தாக்குதல்! 1

இதனையடுத்து சிறீலங்கா காவல்துறையினர்  குறித்த வீட்டிலிருந்த கர்ப்பினிப் பெண் மற்றும்  நோய்வாய்ப்பட்ட மாற்றுத்திறனாளி  கைது செய்யப்பட்ட இளைஞரின் தாயார் ஆகியோர்  மீதும்   தாக்குதல் மேற்கொண்டதாகவும்,  இதனால் கிராம மக்கள் ஒன்று கூடி சிறீலங்கா காவல்துறை மீதும் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை உயரதிகாரிகள் நிலமைமையக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமை குறிப்பிடத்த்க்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments