கிளிநொச்சியில் குடும்பத்தரை மோதி உயிரிழக்க வைத்து தப்பியோடிய வாகனம்!

You are currently viewing கிளிநொச்சியில் குடும்பத்தரை மோதி உயிரிழக்க வைத்து தப்பியோடிய வாகனம்!

கிளிநொச்சி கனகபுரம் டிப்போ வீதியில் அம்பாள்குளம்  பொருளாதார சந்தைக்கருகில் நேற்று(23)  இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த அருளானந்தம் மைக்கல் வயது 49 என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விபத்தில் பலியாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை பட்டா ரக வாகனம் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது  தலைப் பகுதியில் படுகாயமடைந்தவரை அவசர நோயாளர் காவுவண்டி மூலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

 இருப்பினும் அவர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி சிறீலங்கா காவல்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments