கிளிநொச்சியில் திலீபன் நினைவு நிகழ்வு நடத்த தடை!

You are currently viewing கிளிநொச்சியில் திலீபன் நினைவு நிகழ்வு நடத்த தடை!

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலோ, தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தக்கூடதென, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று (16), கிளிநொச்சி அமைந்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட அலுவலகமான அறிவகத்துக்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம், நீதிமன்றக் கட்டளையை வழங்கியுள்ளார்.

15.9.2020 தொடக்கம் 28.09.2020 வரையான நாள்களில் அஞ்சலி நிகழ்வையோ அல்லது ஊர்வலங்கள், கூட்டங்களையோ நடத்தக் கூடாதென, கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள