முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவு சங்க தலைவிக்கு விசாரணைக்கு அழைப்பு!

You are currently viewing முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவு சங்க தலைவிக்கு விசாரணைக்கு அழைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரிக்கு,  பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தன்னுடைய குடும்ப நிலைமை காரணமாக கொழும்பு வர முடியாது என, அவர் மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்ததன் அடிப்படையில், நாளை (17)  மாலை 2 மணிக்கு, முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

பகிர்ந்துகொள்ள