கிளிநொச்சி நகரின் 40 வீதமான காணிகள் படையினரின் ஆக்கிரமிப்பில்!

You are currently viewing கிளிநொச்சி நகரின் 40 வீதமான காணிகள் படையினரின் ஆக்கிரமிப்பில்!

கிளிநொச்சி நகரத்தில் உள்ள நாற்பது சதவீதமான அரச மற்றும் தனியார் காணிகளை படையினர் தொடர்ந்து வைத்திருக்கும் வரை நகரத்தின் அபிவிருத்தியில் எந்த முன்னேற்றத்தையும் எட்ட முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

நகரத்தில் இவ்வாறு அதிகளவான காணிகள் படையினர் வசம் இருப்பது என்பது இராணுவ அடக்கு முறையை சித்தரிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“கிளிநொச்சி நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள டிப்போ சந்தியில் உள்ள காணியினை படையினர் ஆக்கிரமித்து வைத்திருப்பதுடன் அதனை இரானுவத்தினர் தன்னிச்சையாக அளவீடு செய்துள்ளனர்.

அதாவது அளவீடு செய்யப்படுவது தொடர்பில் பிரதேச செயலாளருக்கோ அல்லது மாகான காணி ஆணையாளருக்கோ தெரியாது. இங்கு இராணுவ நிர்வாகமே நடைபெறுகின்றது என்பதை காட்டி நிற்கின்றது.

குறிப்பாக நகரத்தில் அதிக மக்கள் பயன்படுத்துகின்ற டிப்போ சந்தியில் ஒரு சுற்றுவட்ட பாதையை கூட அமைக்க முடியாத அளவுக்கு காணிகளை இராணுவம் வைத்திருக்கின்றது.

அதேபோல கிளிநாச்சி நகரத்தில் உள்ள நாற்பது சதவீதமான காணிகள் இன்றும் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன.

ஏ-09 வீதியின் அறிவியல் நகர் முதல் ஆனையிறவு வரைக்குமுள்ள அதிகளவான அரச மற்றும் தனியார் காணிகள் இரானுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன” என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments