குருந்தூர்மலையில் நிகழ்வை குழப்பிய பௌத்த பிக்குவை கவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்த தமிழ் எம்.பி

You are currently viewing குருந்தூர்மலையில் நிகழ்வை குழப்பிய பௌத்த பிக்குவை கவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்த தமிழ் எம்.பி

குருந்தூர்மலையில் நிகழ்வை குழப்பிய பௌத்த பிக்குவை கவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்த தமிழ் எம்.பி 1

தமிழீழத்தில்  நேற்றைய தினம் (18) குருந்தூர் மலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வை குழப்பிய  சிங்கள பேரினவாத பௌத்த பிக்கு மீது நடவடிக்கையெடுக்குமாறு சிறீலங்கா கவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனால்  குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில், வழிபாட்டின் போது ஆதிசிவன் ஐயனார் ஆலயத்திற்குள் அத்து மீறி நுழைந்து, வன்முறையில் ஈடுபட்ட குருந்தூர் மலை சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி என தன்னை கூறிக்கொள்ளும் கல்கமுவ சாந்தபோதி தேரருக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை மத வழிபாட்டு சுதந்திரத்தை மறுத்து பொங்கல் வழிபாட்டில் பொங்கல் நேர்த்திக் கடனை செய்யவிடாது தடுத்த தொல்லியல் அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கையெடுக்குமாறு குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments