குற்றப்புலனாய்வுப் பிரிவில் சுவிஸ் தூதரக அதிகாரி ஆஜர்!

  • Post author:
You are currently viewing குற்றப்புலனாய்வுப் பிரிவில் சுவிஸ் தூதரக அதிகாரி ஆஜர்!

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் இன்று(திங்கட்கிழமை) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகியிருந்தார்.

அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியதுடன், இறுதியாக அவர் கடந்த சனிக்கிழமை வாக்கு மூலம் வழங்கியிருந்தார்.

இந்தநிலையில் மனநல பரிசோதனைகளுக்காக அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சுவிஸ் தூதரக பெண் அதிகாரியை சிறப்பு மனநல வைத்திய குழு முன்பாக சோதனைக்குட்படுத்த, நீதிமன்றத்திடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் கடந்த தவணையில் அனுமதி கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த பெண் அதிகாரிக்கு இன்றுவரை வெளிநாடு செல்ல கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள