கொக்குத்தொடுவாய் புதைகுழி வளாகத்துக்குள் அத்துமீறிய புலனாய்வாளர்கள்!

You are currently viewing கொக்குத்தொடுவாய் புதைகுழி வளாகத்துக்குள் அத்துமீறிய புலனாய்வாளர்கள்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி முதலாம் நாள் அகழ்வுப்பணிகள் நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது. முதலாம்நாள் அகழ்வுப் பணிகள் முடிவடைந்து அதற்கென வருகைதந்த அனைத்துத் தரப்பினரும் வெளியேறி, குறித்த பகுதி பொலிசாரின் ஆளுகையின் கீழ் வந்த பின்னர், மனிதப் புதைகுழி வளாகத்திற்குள் நுழைந்த இராணுவப் புலனாய்வாளர்கள் குறித்த பகுதியை புகைப்படம் எடுத்துள்ளனர்.

ஏற்கனவே இந்த கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்குவிசாரணையின்போது குறித்தபகுதியில் புலனாய்வளார்களின் அச்சுறுத்தல் நிலைமைதொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந் நிலையில் அகழ்வாய்வின் முதலாம்நாளே இவ்வாறு, பொலிஸ் பாதுகாப்பின் மத்தியிலும் புலனாய்வாளர்களின் அத்துமீறல் செயற்பாடு பதிவாகியிருப்பது, இந்த அகழ்வு தொடர்பிலும், பொலிசாரின் செயற்பாடு தொடர்பிலும் மக்கள்மத்தியில் அதிர்ப்தி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments