கொக்குத் தொடுவாயில் நேற்றும் ஐந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டன !

You are currently viewing கொக்குத் தொடுவாயில் நேற்றும் ஐந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டன !

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று ( 14.09.2023) வியாழக்கிழமை மேலும் ஐந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டு ள்ளன.

மீட்கப்பட்ட மனித எச்சங்களில் நான்கு பெண்கள் உடையவை என்றும் ஒன்று ஆணினுடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று எட்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது மீட்கப்பட்ட மனித எச்சங்களுடன் இந்த அகழ்வுப் பணிகளில் இதுவரை 14, மனித எச்சங்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன. மேலும் பல மனித எச்சங்கள் அடுக்குகளாகக் காணப்படுவதால் தொடரும் அகழ்வுப் பணிகளின்போது மேலும் பல மனித எச்சங்கள் வெளிவரும் என்ற எதிர்பார்ப்புக் காணப் படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை தற்போது மீட்கப்படும் மனித எச்சங்கள் இறுதிப் போரின்போது சிறீலங்கா படைகளிடம் உறவுகளால் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட போராளிகளுடையதுஎன புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்ட பலராலும் கருத்துத் தெரிவிக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொக்குத் தொடுவாயில் நேற்றும் ஐந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டன ! 1

கொக்குத் தொடுவாயில் நேற்றும் ஐந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டன ! 2

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments