கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிக்கான திகதி அறிவிப்பு !

You are currently viewing கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிக்கான திகதி அறிவிப்பு !

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் எதிர்வரும் நவம்பர் மாதம்-20,ம் திகதியே ஆரம்பிக்கப்படும் என்று சட்டத்தரணி வி.கே. நிரஞ்சன் தெரிவித்தார்.

கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று-(30.10.2023) திங்கட்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில்  தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் எடுத்துக் கொள்ளப் பட்டிருந்தது.

அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே சட்டத்தரணி வி.கே. நிரஞ்சன் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர் அகழ்வுப் பணியானது இன்று-(30.10.2023) திங்கட்கிழமை ஆரம்பிக்கப் பட இருந்த நிலையில் ராஜ் சோமதேவ சமூகமளிக்க முடியாததனால் எதிர்வரும் நவம்பர் மாதம்-20, திகதி மீளவும் ஆரம்பிக்கப் பட உள்ளதாகத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

அதேநேரம் மிகுதியாக உள்ள செலவுத் தொகை பணம் எவ்வளவு என்பது தொடர்பாக கதைக்கப் பட்டு அதற்கான கணக்கறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டது.

சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ அவர்களினால் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தவிர்ந்த பிற பொருட்கள் பேராசிரியர் ராஜ்சோமதேவவுக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப் பதற்கு தேவை என்ற அடிப்படையில் முழுவதும் விண்ணப்பம் ஒன்று செய்யப் பட்டிருந்தது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் நாங்கள் தோன்றி அதன் கட்டுக் காவல் பாதுகாக்கப் படவேண்டும் என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தோம். ராஜ் சோமதேவ அவர்களினால் குறித்த பகுதியில் 50, மீற்றருக்குள் வேறு மனித எச்சங்கள் இருப்பது சம்பந்தமாக கண்டு பிடிக்க ராடர் கருவி ஒன்றினை கொண்டு வருவதற்கான முயற்சிக்கு விண்ணப்பம் செய்யப் பட்டிருந்தது.

இது தொடர்பான முழுமையான விபரங்களை நீதி மன்றத்திற்குச் சமர்ப் பிக்கும் படி நீதிமன்றத்தினால் கேட்டுக் கொள்ளப் பட்டது.

இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம்-20, திகதி மீண்டும் அதற்கான ஒன்று கூடல் கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு இடத்தில் மேற்கொள்ளப் பட்டு அகழ்வுப் பணி இடம்பெற உள்ளது

இன்று  இடம்பெற்ற வழக்கின் போது சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து கணக்காளர் அவர்களும் பிரசன்னமாகி இருந்ததாக மேலும் தெரிவித்தார்.

.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments