கொதிக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா – இதுவரை 233 பேர் பலி!

You are currently viewing கொதிக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா – இதுவரை 233 பேர் பலி!

கனடாவின் மேற்குப் பகுதியில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வரலாறு காணாத வகையில் பதிவாகும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக 233இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வன்கூவர் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

குறித்த வெப்பமான காலநிலை காரணமாக அதிகளவில் 70 வயதுக்கு மேற்பட்ட வயது முதிர்ந்தவர்களே உயிரிழப்பதாகவும் கடந்த வௌ்ளிக்கிழமை முதல், 233இற்கும் அதிகமானோர் திடீர் மரணத்தை தழுவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக நேற்று 49.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்றும் இந்த வெப்பநிலை முன்னெப்போதும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்த வெப்பநிலை காரணமாக, வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments