கொரோனா கொடூரம் : ஓஸ்லோவில் இரண்டு புதிய கொரோனா மரணங்கள்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : ஓஸ்லோவில் இரண்டு புதிய கொரோனா மரணங்கள்!

ஒஸ்லோவில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் மேலும் இருவர், கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இதை நோர்வே தேசிய பராமரிப்பு வாரியம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

நோய்த்தொற்று நிரூபிக்கப்பட்ட ஒருவர் சனிக்கிழமை “Oppsalhjemmet” பராமரிப்பு இல்லத்தில் இறந்துள்ளார் என்றும் அதேபோல், மற்றொருவர் இன்று ஞாயிறு “Bekkelagshjemmet” பராமரிப்பு இல்லத்தில் இறந்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில், ஒஸ்லோவின் 39 நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் இப்போது 18 பேர் கொரோனா நோயால் இறந்துள்ளனர். மேலும், இதுவரை 13 நீண்டகால பராமரிப்பு இல்லங்களில், குடியிருப்பாளர்களுக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள