கொரோனா தொற்று ; மொத்த எண்ணிக்கை 1,620 ஆக அதிகரிப்பு

You are currently viewing கொரோனா தொற்று ; மொத்த எண்ணிக்கை 1,620 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கோவிட்- 19 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுவரை மொத்தமாக 1,620 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 781 ஆக உயர்வடைந்துள்ளதாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 829 பேர் வைத்தியசாலைகளில் தங்கிச் சிகிச்சைபெற்று வருகின்றனர். 55 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள