கொரோனா வைரஸ் தோற்றால் 41 வயது நபர் மரணமடைந்தார்!

  • Post author:
You are currently viewing கொரோனா வைரஸ் தோற்றால் 41 வயது நபர் மரணமடைந்தார்!

Hordaland இலுள்ள Bjørnafjorden நகரைச் சேர்ந்த 41 வயது நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார் என்று Bergens Tidende பத்திரிகை எழுதியுள்ளது.

குறித்த நபர், சனிக்கிழமை பெர்கனில் உள்ள Haukeland பல்கலைக்கழக மருத்துவமனையில் இறந்துள்ளார் என்றும், மேலும் அவரது உறவினர்கள் அவரது வயதை வெளியிட ஒப்புதல் அளித்துள்ளனர் என்றும் Bergens Tidende மேலும் எழுதியுள்ளது.

பொது சுகாதார நிறுவனத்தின் (FHI) இன்றைய அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தோற்றால் இது, 40-49 வயதுக்கு இடைப்பட் டோரின் நான்காவது மரணமாகும்

நோர்வேயில் இதுவரை மொத்தம் 224 பேர் கொரோனா தோற்றால் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள