கொலை வழக்குடன் தொடர்புடையவர் தமிழகத்துக்கு தப்பியோட்டம்!

You are currently viewing கொலை வழக்குடன் தொடர்புடையவர் தமிழகத்துக்கு தப்பியோட்டம்!

யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் வழியாக தப்பிச் சென்று தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்த நபர் கொலை சம்பவம் ஒன்றின் பிரதான சந்தேகநபர் எனத் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து படகு மூலம் சென்ற குறித்த நபர் தனுஷ்கோடி பகுதியில் சனிக்கிழமை காலை கரையிறங்கியுள்ளார். இது தொடர்பில் தகவல் கிடைத்த மரைன் பொலிசார் அவரை அழைத்து சென்று விசாரணைகளைன முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – அரியாலை, சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு படகு மூலம் தப்பித்து தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் புகைப்படத்தின் அடிப்படையில், அவர் மீது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் கொலை வழக்கு ஒன்றுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபர் என யாழ்ப்பாணம் சிறீலங்கா விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments