கொழும்பு- புதுக்கடையைச் சேர்ந்த மூன்று சிறுமிகளை காணவில்லை!

You are currently viewing கொழும்பு- புதுக்கடையைச் சேர்ந்த மூன்று சிறுமிகளை காணவில்லை!

கொழும்பு- புதுக்கடையைச் சேர்ந்த மூன்று சிறுமிகள், நேற்று 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள், செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த மூன்று சிறுமிகளையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இந்த மூன்று சிறுமிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த மூன்று சிறுமிகளையும் திங்கட்கிழமை இரவு 8.10க்கும், 9.30 மணிக்கும் இடையில், ராஜகிரிய பிரதேசத்தில் கண்டதாக, அச்சிறுமிகளின் குடும்ப உறுப்பினரென தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர், டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments