வடக்கிற்கு சிவப்பு எச்சரிக்கை!

You are currently viewing வடக்கிற்கு சிவப்பு எச்சரிக்கை!

16 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, மேல், வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களுக்கும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணம், காலி, மாத்தறை மாவட்டங்கள் தவிர, மேற்குறிப்பிடப்பட்ட மாவட்டங்களின் சில பிரதேசங்களில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு மாகாணம், காலி, மாத்தறை, மாத்தளை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments