சபரிமலைக்குச் சென்ற யாழ். ஐயப்ப பக்தர் நடுவானில் மரணம்!

You are currently viewing சபரிமலைக்குச் சென்ற யாழ். ஐயப்ப பக்தர் நடுவானில் மரணம்!

கொழும்பிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு விமானம் மூலம் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் நடுவானில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழையை சேர்ந்த 49 வயதுடைய மோகனதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

ஐயப்ப பக்த நண்பர்களுடன் விமானம் மூலம் சபரிமலைக்கு சென்றவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது குறித்த நபருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், விமானத்தில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் அவரது உடல்நிலை மோசமானதால், இதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அவசர கால மருத்துவ உதவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விமானம் சென்னையில் தரையிறங்கியதும் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் விமானத்தில் ஏறி குறித்த நபரை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த விமான நிலைய பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்ல வந்த மோகனதாஸ் இறந்ததால், அவரது உடலை மீண்டும் இலங்கைக்கு கொண்டு செல்ல இலங்கை தூதரக அதிகாரிகள் மூலம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments