சர்வதேச ஓவியர்களின் கவனத்தை ஈர்த்த மட்டக்களப்பு இளைஞனின் ஓவியக் கண்காட்சி!

You are currently viewing சர்வதேச ஓவியர்களின் கவனத்தை ஈர்த்த மட்டக்களப்பு இளைஞனின் ஓவியக் கண்காட்சி!

மட்டக்களப்பு செட்டிபாளையத்தை சேர்ந்த ஓவியரும் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளருமாகிய வேதராணியம் கோகுலறமணன் அவர்களின் இரண்டாவது சர்வதேச ஓவியக் கண்காட்சி இம் மாதம் 15ம் திகதி முதல் 18ம் திகதி வரை இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் இடம்பெற்றது.

உலகத் தரம் வாய்ந்த ஓவியக் கலைஞர்களை உருவாக்கி வெளியுலகிற்கு கொண்டுவரும் நோக்கில் சர்வதேச அளவில் செயற்ப்பட்டுக் கொண்டிருக்கும் Rainbow ART world அமைப்பானது இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த ஓவியக் கலைஞர்களை ஒன்றிணைத்து இந்த மாபெரும் கண்காட்சியை KENDRA ART SPACE ல் பிரமாண்டமான காட்சிக் கூடங்களில் நடத்தியிருந்தது.

இதில் MIND’S EYES என்ற தலைப்பில் ஓவியர் ரமணணின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு சர்வதேச ஓவியர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.

கடந்த காலங்களில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ள வேதராணியம் கோகுலரமணன் மட்டக்களப்பு ஓவியர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

சிறுவயதுமுதல் கலைத்துறையில் ஆர்வம்மிக்கவராக விளங்கிய இவர் தன்னை முழுமையாக வளப்படுத்திக்கொண்டு சிறப்புமிக்க ஓவியக் கலைஞராக திகழ்ந்து வருகின்றார்.

இவரது கடந்த கால தமிழர் பண்பாட்டியல் சார்ந்ததும் தமிழர் கூத்துமரபு சார்ந்ததுமான ஓவியங்கள் பல பலராலும் பாராட்டிப்பேசப்பட்டுள்ளதோடு பல ஓவியக்கண்காட்சிகளிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments