முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

You are currently viewing முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட கேப்பாபிலவு மக்கள் அரசின் அஸ்வெசும கொடுப்பனவில் இருந்து அவர்கள் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் வாசலை மறித்து எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இதன்போது மாவட்ட செயலக நுழைவாயிலில் சிறீலங்கா காவற்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் தங்கள் ஆதங்கத்தினை மக்கள் வெளிப்படுத்தினர்.

அரசின் உதவித்திட்டம் தங்களுக்கு கிடைக்கவில்லை என்ற கருத்தினையும் மக்களின் சொந்த காணிகள் இதுவரை விடுவிக்கப்பாடாத நிலையில் அரசின் இந்த உதவித்திட்டமும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தினையும் மக்கள் தெரிவித்தனர்.

மாவட்ட செயலக வாசலை மறித்த மக்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்துரையாடிய பின்னர் சிலரை மாவட்ட செயலக மண்டபத்திற்கு அழைத்து சென்று மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இதனடிப்படையில் மக்களை முறையீடுகளை மேற்கொள்ளுமாறும் தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் மேலதிக அரசாங்க அதிபர் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

 

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள்! 1

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments