சாந்தனின் இறுதிக்கிரியைகள், அவரது சகோதரியின் இல்லத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பம்.

You are currently viewing சாந்தனின் இறுதிக்கிரியைகள், அவரது சகோதரியின் இல்லத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பம்.

சாந்தன் எனப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் உடல் நேற்றிரவு முதல் யாழ். வடமராட்சி, உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தி யாழ். வடமராட்சியை நேற்று மாலை சென்றடைந்த பின்னர் தீருவிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதையடுத்து இலக்கணாவத்தையில் உள்ள அவரது சகோதரியில் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

சாந்தனின் இறுதிக்கிரியைகள், அவரது சகோதரியின் இல்லத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகும்.

இறுதிக்கிரியைகள் நிறைவு பெற்றதும் அவரது உடல் ஊரில் உள்ள சனசமூக நிலையத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறும். அதனைத் தொடர்ந்து புகழுடல் சாந்தனின் பூர்வீக இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பின் இறுதி யாத்திரை ஆரம்பமாகும்.

வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்துக்குப் உடல் எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சாந்தனின் இறுதிக்கிரியைகள், அவரது சகோதரியின் இல்லத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பம். 1

 

 

சாந்தனின் இறுதிக்கிரியைகள், அவரது சகோதரியின் இல்லத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பம். 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments