சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!!

You are currently viewing சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!!

பல்வேறுபட்ட  கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  இடம்பெற்றது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!, கொரோனா திரைமறைவில் எங்களை வதைக்காதே, அனைவருக்கும் தடுப்பூசி வழங்கு, பாதுகாப்பு வழிகளைச் செய்து பாடசாலைகளை தொடங்கு, உணவுப் பொருட்கள் – எரிபொருட்களின் விலையை உடனே குறை!, விவசாயிகள் – மீனவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்குத் தீர்வு காணு,  மற்றும் நிறுத்து நிறுத்து விலை உயர்வை நிறுத்து உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments